சென்னையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ்,திருமணம் செய்ய எண்ணி ஒரு மணப்பெண்ணைத் தேடிப் பிடித்து பழகுகிறார்.வருங்கால மனைவியின் ஆசைக்காக ஒரு கறுப்பு பல்சர் (பைக்) துள்ளுந்தை வாங்குகிறார்.அதை வாங்கியதிலிருந்து பல மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன.அதற்கு, அந்தத் துள்ளுந்தில்
இராமாயணத்தில் இடம்பெற்றது தண்டகாரண்யம்.தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே அதன்பொருள்.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு உண்மையான தண்டனைக்குரியவர்கள் யார்? என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது படம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா ஆகியோரோடு வசித்து வருகிறார். கலையரசன்
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்,தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன்,முத்துக்குமார், ரித்விகா,வின்சு ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” லேர்ன் அண்ட் டெக் (Learn&Teach) புரொடக்ஷன் எஸ்.சாய் தேவானந்த்,எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இம்மாதம் 19 ஆம் தேதி திரைக்கு
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தினேஷ், 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.பா.இரஞ்சித்தின் முதல்படமான அது வெற்றி பெற்றதால் அதன் நாயகன் தினேஷ், அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். அப்படத்துக்குப் பின் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன என்றும் ஆனால் படங்களைத் தேர்வு செய்வதில் அவர் காட்டிய சுணக்கத்தால் நிறையப் படங்கள்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் லப்பர் பந்து. இப்படத்தில்,பால சரவணன்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஷான் ரோல்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண்குமார் தயாரித்திருந்தார்.
படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே ஒரு காதல், சாதியப்பாகுபாடு மற்றும் அதன் விளைவுகள் ஆகியனவற்றை உறுத்தாமல் தொகுத்துச் சொல்லியிருக்கும் படம் லப்பர் பந்து. ஹரீஷ்கல்யாண்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.
ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்,ஒரு அம்மா, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.இரண்டு பெண்களின் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.அண்ணன், தம்பிகளுக்குள் திருமண விசயத்தில் தீராப்பகை. இவற்றோடு அந்த அம்மா வழக்கமான அம்மா இல்லை. வித்தியாசமான குணாம்சங்கள் கொண்டவர். அதனால் பல சிக்கல்கள். ஒருநாள் அந்த அம்மா காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா? அந்தக் குடும்பம் என்னவானது?
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய
ஒளிப்பதிவாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி நடிகராகப் புகழ்பெற்றிருப்பவர் அருள்தாஸ். அவர் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதியபடத்தை அவர் தயாரிக்கவிருக்கிறாராம். இந்தப்படத்தை மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்குகிறாராம். மதயானைக்கூட்டம் படத்துக்குப் பிறகு அவர் இராவணகோட்டம் என்றொரு படத்தைத் தொடங்கினார்.





















