2015 ஆம் அண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமாண்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களில் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக
நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இப்போது இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அருள்நிதி. ரோமியோ
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் அதிலும் அருள்நிதியே கதாநாயகனாக நடிக்கவுள்ளார்
பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி. காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான
ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார் அருள்நிதி. அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் வேடம் அவருக்கு. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார். அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா
தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற
2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம். ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக
தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க


















