தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இதை நடிகர் விஜய்சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் கொடுத்த ஒரு பேட்டியில்…. நான் ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த
1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவுநாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் எனும் படம்
அண்மையில் பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்… பாலிவுட்டில் (இந்தித் திரையுலகம்) தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? என்கிற கேள்விக்கு, நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விசயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை
தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற அளவுக்கு சர்ச்சையையும் சந்தித்தது. அதற்குக் காரணம், இந்தப்பாடலை முதலில் பாடியவர்
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில்
கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில்
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல், காதல் புனிதமானது என்கிற கருத்தையும் ஒருசேர உடைத்து நொறுக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க
நிச்சயமாக என் தந்தை ஒரு பெரிய மனிதர்.சினிமாவுக்கு அவர் அளித்த நம்பமுடியாத பங்களிப்புகளுக்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் சொல்கிறேன். தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவுசெய்து இதுபோன்ற தவறான தகவல்களில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான
கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி சந்தீப்கிஷனால் ஒரு புயல் வீசுகிறது.அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம்




















