அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க ஒரு பெரிய குழு திட்டமிடுகிறது.சமுதாயத்தில் ஒரு சாதாரண இளைஞனாக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மதராஸி. முழுக்க முழுக்க ஆக்ஷன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.ஸ்ரீலட்சுமி மூவிஸ் எனும் தெலுங்குப் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. செபடம்பர் 5 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.விரைவில்
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருக்குமென்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அமரன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டும்.அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சுமார் இருபத்தைந்து நாட்கள் இருக்குமென்கிறார்கள்.அதன்பின் மீண்டும்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்கவிழா பிப்ரவரி 14 அன்று எளிமையாக நடந்தது.பிப்ரவரி 15 ஆம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப்படத்தில் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.சுதீப்
சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே இருக்கிறது.அதற்காக உடல் எடையைக் குறைத்து தயாராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 2024 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து,ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது அவர், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படத்தின்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே தெலுங்கு
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ராங்கி. த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் டிசம்பர் 30 ஆம்




















