சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய படம் – அக்டோபரில் தொடக்கம்

சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது.
மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்திருபதால் விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அக்டோபர் மாதத்தில் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

அது என்ன படம்?

இயக்குநர் சுசீந்திரன் கொரோனா காலகட்டத்திலும் பாரதிராஜா ஜெய் ஆகியோர் நடித்த ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதுமட்டுமின்றி, அதற்கடுத்து ஜெய் நாயகனாக நடிக்கும் இன்னொரு படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் இயக்குநர் சுசீந்திரன் பற்றி சிம்புவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஜெய். இதன்விளைவாக சுசீந்திரன் சிம்பு சந்திப்பு நடைபெற்றதாம்.

அப்போது ஒரு கதையை சிம்புவுக்கு சுசீந்திரன் சொன்னதாகவும் அது சிம்புவுக்குப் பிடித்ததால் அக்டோபரில் படப்பிடிப்பு என்றால் கூட நான் தயார் என்று சிம்பு சொல்லியிருப்பதாகத் தகவல்.

இத்னால் புதிய படத்தின் படப்பிடிப்பினூடே சிம்பு படத்தைத் தொடங்கும் வேலைகளிலும் சுசீந்திரன் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts