சினிமா செய்திகள்

கொரோனா பயத்திலிருந்து மீள ரஜினி சொன்ன தத்துவம்

வெளிநாடு வாழ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதி விலக்கல்ல.

உங்களைப் பிரிந்து வாழும் உறவினர்களும் குடும்பத்தினரும் உங்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். கவலை கொண்டுள்ளனர். நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாது கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும், இந்த ஆண்டு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழ்க. கவலைப்படாதீங்க.. இதுவும் கடந்து போகும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts