செய்திக் குறிப்புகள்

காதல் இல்லை ஆனால் மனதை வருடும் கதை – ஒற்று திரைப்பட விவரம்

ஓர் எழுத்தாளரின் கதையை திரில்லர் வகையில் சொல்லும் திரைப்படம் ‘ஒற்று’.

சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில்,‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஓர் எழுத்தாளர் பார்வைத்திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்தப்பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார், என்பதைக் குடும்பபாங்காகவும், திரில்லர் ஜானரிலும் சொல்லுவதே ஒற்று.

மனதை வருடும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாடல்கள் மற்றும் காதல், காதல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.

ஊட்டு, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது நிறைவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Posts