தமிழில் செக்கச் சிவந்த வானம், தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா?
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கலை – ஷர்மிஷ்டா ராய்,உடைகள் வடிவமைப்பு – ஏகா லகானி,சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன், ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி,ஒப்பனை – சிகை அலங்காரம் – செரினா டிக்ஸேரா, புகைப்படங்கள் – சி.எச்.பாலு, மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – கோபி பிரசன்னா,
லைன் புரொட்யுசர் – கே.சின்னதுரை, கிரியேடிவ் புரொட்யுசர் – கிரண் & பிஜாய் நம்பியார், நிர்வாக தயாரிப்பாளர் – சிவா அனந்த், எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன்
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு தெலுங்கில் நவாப் என்று பெயர் வைத்துள்ளனர்.











