சினிமா செய்திகள்

இடம் மாறிய மாநாடு – அடுத்த மாதம் படப்பிடிப்பு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.வெங்கட்பிரபு இயக்கும்
இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்.

இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின் ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடர்ந்தது.கொரோனா சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.அதைத் தொடர்ந்து தடைபட்டிருந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்தவரிசையில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகளும் நடக்கிறதாம்.

ஐதராபாத் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை மற்றும் மதுரைப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.

இப்போது அந்தத் திட்டம் முழுமையாக மாறிவிட்டதென்கிறார்கள். பெரும்பகுதிப் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதற்காகப் படக்குழுவினர் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த இடம்தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

அக்டோபர் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Related Posts