சினிமா செய்திகள்

பெண் நடன இயக்குநர் படத்தில் துல்கர் சல்மான்

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்போது அவர் இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். 

அந்தப்படத்தை இயக்கவிருப்பவர் புகழ்பெற்ற நடன இயக்குநர் பிருந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமின்றி தென்னைந்திய மொழிப்படங்கள் மற்றும் இந்திப்படங்களிலும் நடனம் அமைத்தவர் பிருந்தா.

விஜய்,அஜீத், சூர்யா உட்பட எல்லா முன்னணி நாயகர்களுக்கும் நடனம் அமைத்தவர் அவர்.

பல ஆண்டுகளாக நடன இயக்குநராகப் பணியாற்றிய அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு இயக்குநர் ஆகிறாராம்.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts