தனுஷ் விளக்கம் சொன்னாலும் எதார்த்தம் இதுதான்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,’வடசென்னை’ 2 ஆம் பாகம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது வேகமகப் பரவியதைத் தொடர்ந்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், எதனால் என் ரசிகர்களிடையே குழப்பம் வந்தது என்று தெரியவில்லை. ‘வடசென்னை 2’ படம் கண்டிப்பாக வரும். என் பக்கத்திலிருந்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல் வரும் வரை எனது படம் பற்றிய எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் இப்படிச் சொன்னாலும் எதார்த்தம் வேறாக இருக்கிறது.அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ மற்றும் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியனவற்றில் நடித்து வருகிறார்.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவை மட்டுமின்றி,கார்த்திக் சுப்புராஜ், செல்வராகவன் ஆகியோருடன் அடுத்தடுத்து பணிபுரியவுள்ளார்.
ஆக மொத்தம் இப்போது அவர் கைவசம் ஆறு படங்கள் உள்ளன. வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியானால் கூட மூன்று வருடங்கள் பிடிக்கும். அதன்பின்னர் வடசென்னை இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என்று தெரியவில்லை என்கிறார்கள்.