2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 அன்று அறிவிக்கப்பட்டது.அதில் சிறந்த தமிழ்ப் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த
2019 ஆம் ஆண்டு வெளீயான திரைப்படங்களுக்கான 67 ஆவது தேசிய விருதுகள் நேற்று (மார்ச் 22,2021) அறிவிக்கப்பட்டன. கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவற்றில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. ’அசுரன்’ படத்துக்காக சிறந்த
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை இன்று கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரங்கள்… சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக
புகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு… அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. எங்கள் மகிழ்வான வணக்கம். எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
இந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கான்.இவர் நடித்த இந்திப்படங்களான உயிரே, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியானது.அதனால் தமிழக ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயம். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்கிற குறிச்சொல் போட்டு அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அசுரன் – பிரிப்பவன் அல்ல;




















