சினிமா செய்திகள்

ஒரே அறையிலிருந்து பிரிவை அறிவித்த தனுஷ் ஐஸ்வர்யா – புதிய தகவல்கள்

நடிகர் தனுஷ் மணமுறிவுச் செய்தி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தனுஷின் மனைவி மட்டுமின்றி ரஜினிகாந்த்தின் மகள் என்பது கூடுதல் பரபரப்புக்குக் காரணமாகிவிட்டது.

இந்தத் தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினர் அனைவருமே அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு பேசப்படுவதில் சில புதிய தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்பே மனைவியைப் பிரியும் முடிவை தனுஷ் எடுத்துவிட்டாராம்.
அதை அவர் மனைவி ஐஸ்வர்யாவும் ஏற்றுக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

ஆனால் ரஜினி உட்பட இருவருடைய குடும்பத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அதனால் முடிவை அறிவிப்பதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்களாம்.

ஒரு கட்டத்தில் ரஜினி குடும்பம் இந்த மணமுறிவை ஏற்றுக்கொண்டதாம். இப்போதும் தனுஷ் குடும்பம் இதை விரும்பவில்லையாம்.

ஆனால், தன் அ்ப்பா ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ரஜினி ஒப்புக்கொண்டதும் முடிவை அறிவிக்க முன்வந்திருக்கிறார்.

உடனே, வாத்தி படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ், ஐஸ்வர்யாவையும் அங்கே வரச்சொல்லியிருக்கிறார்.

இருவரும் இரண்டு மூன்று நாட்கள் பேசி எடுத்த முடிவின்படியே பிரிவு அறிவிப்பு வந்திருக்கிறது.

ஒரே அறையில் இருந்து கொண்டே பிரிவு முடிவை
தத்தம் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இருவரும் இணைந்து பிரிவதாக அறிவித்த பின்பும் இருவரையும் சமரசம் செய்து இணைந்து வாழ வைக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

Related Posts