Home செய்திகள் Archive by category நடிகர் (Page 24)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

ஏழைகளுக்கு உதவிய விக்ரம் பிறந்தநாள் விழா

சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப்
சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அப்பாவின் பெருந்தன்மை

1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம்
சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு
சினிமா செய்திகள் நடிகர்

முன்பின் தெரியாதவருக்காக பிரார்த்தனை செய்த சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாக உள்ளது. சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50) ஏப்ரல் 13 அன்று காலை தீக்குளித்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராமல் சரவண சுரேஷ் ஏப்ரல் 14 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்குக் கொண்டு
சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்

உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை அமைத்திருக்கிறார். இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர்
சினிமா செய்திகள் நடிகர்

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது – ரஜினிகாந்த் வேதனை

சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தி…. உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள
சினிமா செய்திகள் நடிகர்

சுந்தர்.சி சொன்ன இரகசியம் – வெளிப்படுத்திய விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து
சினிமா செய்திகள் நடிகர்

இருமொழிப் படம் குறித்து கிளம்பிய வதந்தியும் கார்த்தியின் விளக்கமும்

நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே.
சினிமா செய்திகள் நடிகர்

நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை – சிம்பு பேட்டி

காவிரிச் சிக்கல் தொடர்பாகப் பேசியபோது. அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாகப் பேசி தீர்க்க வேண்டும் என்று சொன்னார் நடிகர் சிம்பு. சிம்புவின் இந்தக் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது கருத்தை கன்னடர்கள் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி. கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற