செய்திக் குறிப்புகள்

சிபிராஜுடன் விடிய விடிய காரில் சுற்றினேன் – ஆண்ட்ரியா கலகல பேச்சு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”.

வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.

இதனையொட்டி வட்டம் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது..,

கமலக்கண்ணன் இயக்கிய மதுபானக் கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களும் இந்தப் படத்தை மெருகேற்ற பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஜூலை 29 ஆம் தேதி இந்தப் படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகன் சிபிராஜ் பேசியதாவது…..,

வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்தக் கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்தக் கதை ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. இயக்குநர் கமலக்கண்ணன் மற்றும் கவிநயம் இந்தப் படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலக்கண்ணன், இயக்குநர் மணிவண்ணன் போல கருத்துகள் கொண்டவர்.மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியாவின் மிகப்பெரிய இரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்தப் படம் வருகிறது. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

இயக்குநர் கமலக்கண்ணன் பேசியதாவது..,,,,,

இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கின்றன. எனது முதல் படம் நிறைய வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்யக் கூடிய மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்தச் சமூகத்தில் அதை விடப் பல திரில்லிங் தருணங்கள் இருக்கின்றன. அது இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரைச் சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்தப் படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசியதாவது..,

ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்தப் படத்தை இவ்வளவு நாள் தாங்கிப் பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் ஒரவு ஒன்பது மணி தொடங்கி காலை ஆறு மணிவரை காரில் சுற்றினேன். ஷூட்டிங்கிற்காகத்தான். அப்படிச் சுற்றும்போது ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிகத் தெளிவாக எடுத்துள்ளார். படத்தைப் பார்த்து உங்களது ஆதரவைத் தாருங்கள் என்றார்.

நடிகை அதுல்யா ரவி பேசியதாவது..,

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்தப் படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. நான் நடிக்கும் முதல் ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும் என்றார்.

நக்கலைட்ஸ் சசி பேசியதாவது..,

எனக்கும் சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது…..,

இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இந்தப் படத்தில் வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts