Uncategorized

இரண்டாவது நாளில் அஜீத் படத்துக்குக் கிடைத்த அதிர்ச்சி

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியானது.

வெளிவருமுன்பே பரவலான வரவேற்பு விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தது.

பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களையும் குற்றங்களையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய கருத்து கொண்ட படமாக இருந்ததால் திரையுலகினர் பலரும் இப்படத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் படம் வெளியான ஆகஸ்ட் எட்டாம் தேதி எல்லாக்காட்சிகளுக்கும் மக்கள் கூட்டம் இருந்தது. நல்ல வசூல் இருந்தது என்று சொன்னார்கள்.

இதனால் படக்குழுவினரும் அஜீத் ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஆனால் நேற்று அதாவது ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நிலைமை தலைகீழாகி விட்டதாம்.

தமிழகமெங்கும் கூட்டம் முற்றாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள். முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இரண்டாவது நாளே இவ்வளவு குறையும் என்று எதிர்பார்க்கவில்லையென திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதனால் படக்குழுவினர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts