சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட்டை நிராகரித்த அகிலன் – வியப்பில் திரையுலகம்

ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில்
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி கதாபாத்திரம்.

‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதனால் படத்தயாரிப்பு நிறுவனம் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை அணுகி இந்த்ப்படத்தை வெளியிடும்படி கேட்டுக்கொண்டதாம்.

ரெட்ஜெயண்ட் நிறுவனமும் அக்கோரிக்கையை ஏற்று படத்தை வெளியிட ஒப்புக்கொண்டதாம்.ஆனால் அந்நிறுவனத்தின் பெயர் போடாமல் வெளியிடுகிறோம் என்று சொன்னார்களாம்.

அதுமட்டுமின்றி முன்தொகையாக அகிலன் படக்குழு கேட்ட எட்டுகோடி தரமுடியாது வேண்டுமானால் ஆறு கோடி கொடுக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்விரண்டையும் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் ஏற்கவில்லையாம். அதனால், நீங்கள் வெளியிடவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

அதோடு தமிழ்நாட்டின் எல்லா விநியோகப்பகுதிகளுக்கும் தனித்தனியாகப் படத்தைக் கொடுத்துவிட்டாராம். சென்னை தவிர மற்ற எல்லாப்பகுதிகளிலும் விநியோக முறையில் படத்தைக் கொடுத்திருக்கிறார்களாம்.

அதேசமயம் தமிழ்நாடெங்கும் சுமார் பத்துகோடி முன்தொகையாகக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எல்லாப்படங்களையும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொண்டுபோய்க் கொடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ரெட்ஜெயண்ட் வேண்டாமென ஒரு தயாரிப்பாளர் துணிச்சலாக முடிவெடுத்திருப்பது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

Related Posts