சன் டிவியின் புதிய நெடுந்தொடர் இலக்கியா – விவரங்கள்

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற நெடுந்தொடர் சந்திரலேகா. எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு தினமும் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடரின் பெயர் இலக்கியா.
இந்த நெடுந்தொடரின் கதையை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.ஏர்கெனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான தொடர்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல கலைஞர்கள் இந்தத் தொடரிலும் பணியாற்றுகிறார்கள்.
தந்தை கைவிட்டுவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு வயதில் தங்களைக் காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொள்கிறாள்.பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்கப் போராடுகிறாள்.
கதையின் நாயகன் கெளதம், பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்குக் கிடைக்கிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்குக் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப்பயணத்தை எப்படி வெற்றிகரமாகத் தொடர்கிறாள்? அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாள்? என்பனவற்றை இலக்கியா நெடுந்தொடர் தொடர் விளக்குகிறது.
இந்தத் தொடரில், ரூபஸ்ரீ,நந்தன்,ஹீமாபிந்து,சுஷ்மா,டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தத் தொடரை, சரிகம இண்டியா லிமிடெட் சார்பாக பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
இந்தத் தொடருக்கான கதையை,சரிகம கதை இலாகா உருவாக்கியிருக்கிறது. திரைக்கதையை கலைமாமணி சேக்கிழார் எழுதுகிறார்.தொடருக்கான வசனங்களை குரு சம்பத்குமார் எழுதுகிறார்.
இலக்கியா தொடரின் இயக்குநராக சாய் மருதுவும், கிரியேட்டிவ் ஹெட்டாக பிரின்ஸ் இமானுவேலும் பணியாற்றுகிறார்கள்.
சந்திரலேகா தொடரைப் போல இதுவும் பெரிய வாவேற்பைப் பெற்று பல்லாண்டுகள் ஒளிபரப்பாகும் என குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.