திரையுலகுக்கு வந்தார் பெருமாள்முருகன்

புகழ்பெற்ற நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றி பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது தமிழ்த் திரையுலகம்.
பல ஆண்டுகளாக இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களைத் திரைப்படங்களாக்க் கொண்டு வருவதையும் திரைத்துறை செய்து வருகிறது.
இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார்,தனது புதிய படத்தைத் தயாரிக்கிறார்.எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவலைத்தான் அவர் திரைப்படமாக எடுக்கிறார்.
இந்தப்படத்துக்கு பெருமாள்முருகனே கதை, வசனம் எழுதுகிறார்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சேத்துமான்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஹிருதயம்’ போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பால் பான்-இந்திய இரசிகர்களைக் கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு. திரைக்கதை மற்றும் இயக்கம்: தமிழ்,கதை, வசனம்: பெருமாள் முருகன்,
தயாரிப்பு: எஸ்.வினோத் குமார், ஒளிப்பதிவு: தீபக்,இசை: பிந்துமாலினி – வேதாந்த் பரத்வாஜ்,படத்தொகுப்பு: கண்ணன்,தயாரிப்பு வடிவமைப்பாளர்: பி.ஜெயமுருகன், ஒலி வடிவமைப்பு: அந்தோணி பிஜே- ரூபன்,
சண்டைப்பயிறசி: பில்லா ஜெகன், ஆடை வடிவமைப்பாளர்: ஈகா பிரவீன்
இப்படம் குறித்து இயக்குநர் தமிழ் பேசும்போது,
நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப்படம் உருவாக்குவதில் கிடைக்கும் அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்என்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1, 2023 அன்று காலை பெங்களூரில் தொடங்கியது.
படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறுகிறார்கள்.