சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நயன்தாரா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி.

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.

இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபக்ட்ஸ் என பிரமாண்டமாக உருவாகிவருகிறது,

தெலுங்கில் தயாராகியுள்ள அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதே நாளில் இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தமிழில் ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இத்தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அந்நிறுவனம் தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு ஆண்டுகளில் முதன்முறையாக ட்விட்டர் மூலம் இந்த அறிவிப்பை வெளீயிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

Related Posts