வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று எல்லாப்படங்களிலும் சொல்வார்கள்.உண்மையிலேயே வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.இருவர் தங்கும் வசதி எனப்பொருள். இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமான கதை. ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை.
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன். கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே
ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று. ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக் காதல்தான் சிக்கல், வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஒன்னொரு இணை. இவர்கள் திருமணமானவர்கள். பத்துமாதங்களிலேயே மனைவியைப் பிரிய வேண்டிய சூழல் இவர்களுடைய சிக்கல். மூன்றாவதாக டெல்லிகணேஷ் – லீலா சாம்சன்
இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா 1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன. வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின்
திரையை இரண்டு பாதியாகப் பிரித்து ஒரேநேரத்தில் இரண்டு பக்கமும் இரண்டு காட்சிகளைத் திரையிட்டு அதில் கதை சொல்லியிருக்கும் புதிய உத்தியில் தயாராகியிருக்கும் படம் பிகினிங். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். சனவரி 26 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 3 ஆம் தேதி நடந்தது.
கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி. இவற்றில் முதலில் வருவது கெளதம்மேனனின் எதிர்பாராமுத்தம். கெளதம்மேனன் அமலாபால், ரோபோ சங்கர்,
இயக்குநர் அட்லி, புது இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தகாரம் எனும் படத்தை வெளியிடுவதாக ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவித்தார். அதன் முன்னோட்டம் ஏப்ரல் 14 அன்று வெளியானது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அந்தகாரம் என்றால் கும்மிருட்டு என்று பொருள். பார்வையற்ற
இயக்குநர் அட்லி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அட்லியின் நிறுவனம் சார்பில் வெளீயிடப்படும் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று சொல்லியிருந்தார். பலபேர் அந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த அதேநேரம் உங்களுடைய அடுத்த படம் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவற்றிற்கு அவர்
அடர்ந்த காடுகளை அடவி என்பார்கள். இந்தப்படமும் காடுகளைக் காக்க வேண்டும் என்பதையே பேசுகிறது. வனப்பகுதியைச் சுற்றுலாத் தளமாக்க வேண்டும், அதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டமிட, மலைவாழ் மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதே படம். நாயகனாக நடித்திருக்கும் வினோத்கிஷன், துடிப்பான இளைஞராக இருக்கிறார். மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு




















