பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின்,
2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும்
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து
நேற்று (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வரும்
தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு
மாயா, ஜோக்கர்,கஷ்மோரா,மாநகரம், என் ஜி கே, கைதி உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதியுள்ள கட்டுரை…. திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை
2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை போன்ற வித்தியாசமான அம்சங்களுடன் இந்தப் படம் உருவானது. இந்தப்
கைதி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது… ‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த
பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடனே தவறான புரிதல் காரணமாக காவல்துறையிடம் சிக்குகிறார் கார்த்தி. பெற்ற மகள் அனாதை இல்லத்தில் இருப்பதை அறிந்து பார்க்கப் போகும் நேரத்தில் அவருக்கு இந்தச் சிக்கல். அதே நேரத்தில் 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார் நரேன். அதனால் அவரையும் அவரது சகாக்களையும் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம். இந்நிலையில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமையன்றே வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திடீர் மாற்றம் செய்திருக்கிறார்கள். கைதி படம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்றே வெளியாகவிருக்கிறதாம். பண்டிகை நாளில் வெளியாவதுதான் சரி என்று






















