இளையராஜா குடும்பத்திலிருந்து அவரது சகோதரர் கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர்,அவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா,யுவன் ஷங்கர் ராஜா,சகோதரர்களின் வாரிசுகளான வெங்கட்பிரபு,பிரேம்ஜி,வாசுகி பாஸ்கர் என ஏராளமானோர் திரைத்துறையில் இருக்கின்றனர்.அண்மையில் இளையராஜாவின் பேரன், யத்தீஸ்வர் ராஜா இசையமைப்பாளராக
நூறு சட்டங்கள் ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டாலும் சாதிவெறி கொண்டு செய்யும் ஆணவப் படுகொலைகளுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் எதார்த்தம்.அதற்கெதிராக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.திரையில் அதைத் தொடர்ந்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். மருத்துவமனையொன்றில் நடக்கும் குழந்தை கடத்தல் நிகழ்வில் அங்கு மருத்துவப் பணியாளராகப் பணியாற்றும் நாயகன்
விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படைத் தலைவன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரோடு, யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம்,
பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்
சிபிராஜ் இப்போது ஜாக்சன்துரை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில், சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்பாகத்தை இயக்கிய பி.வி.தரணிதரன் இயக்குகிறார்.இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின்
கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத் சக்சேனா,காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ராமராஜன், ஒரு விபத்தில் சிக்கியதால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.14 ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாமானியன். அஜீத்தின் துணிவு படம் போல எடுத்ததும் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளோரைச் சிறை பிடிக்கிறார் ராமராஜன்.வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்று நினைக்கும்போது அப்படிச் செய்யாமல் மதுரையிலிருந்து மூன்று
திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண்
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு ஒப்புதல் வழங்கினார் இளையராஜா. தன் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் முதலில் இளையராஜா ஆர்வம் காட்டவில்லையாம்.அதன்பின் அவர் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறதென்கிறார்கள். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் என்பவருக்கு உதவி செய்யும் விதமாக





















