திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் என்ப்படும் பல்திரைக்கூடங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் எனப்படும்
தற்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் இணையதள ஒளிபரப்பு சேவைகள் திரைப்படங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரத்தில் அவை திரையரங்குகளைக் கொன்று கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள இச்சிக்கல், கேரளாவில் மோதலாக வெடித்துள்ளது. அங்கு, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் விரைவாக வெளியிடப்படுவதைக் கண்டித்து இன்றும் நாளையும்
2023 திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன். இரண்டுமே பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. சனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படம் திரையிடப்படும் எனவும் அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படமும் திரையிடப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க
எட்டாவது 20 ஓவர் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை டி-20 மட்டைப்பந்துப் போட்டித் தொடரில்
ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை.இப்படம் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது. அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன.
நடிகர் தம்பி ராமய்யா மகன் உமாபதி ராமய்யா கதாநாயகனாகவும் நாயகியாக சம்ஸ்கிருதியும் நடித்துள்ள படம் தண்ணிவண்டி. பாலசரவணன், தம்பிராமய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது….. ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய
திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட
பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன. இந்நிலையில்,
திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில்,