நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தத் திரைப்படத்தை இந்தியில் எடுக்கும் பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாகத்
அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” . இரண்டு மாதங்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது. அக்ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பின் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின், நசரத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் திரைப்படங்களை நேரடியாக இணைய தளத்தில் வெளியிட பலர் முடிவு செய்துள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம்
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’ 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்திப்படம் மிஷன் மங்கள். மிஷன் மங்கள் என்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பட்ட ஒரு சாதனை. மேலும் அது, அதனுடைய முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது. அதை அடிப்படையாகக் கொண்டு தயாரான படம்தான் மிஷன் மங்கள். அக்ஷய்குமார், வித்யாபாலன், நித்யாமேனன், சோனாக்ஷிசின்ஹா,
இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு….. தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘காஞ்சனா’வின் முதல் பாகத்தை இந்தியில் மொழிமாற்று செய்ய நடிகர் அக்ஷய் குமார் முடிவெடுத்தார். அந்தப்படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ‘லக்ஷ்மி பாம்ப்’ என்று பெயர் வைக்கப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு
உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய அந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் அக்ஷய்குமார் ஏற்கிறார். அண்மையில் வெளியான ரஜினி நடித்த 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்ஷய்குமார். இங்கு சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகரிடம் பேசப்பட்டுக்
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம். படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும்
ரஜினியின் 2.ஓ படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் படம் இந்தியன் 2. கமல் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14 அன்று (அதாவது இன்று) தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது,




















