46 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் இராஜசேகர் பாண்டியன் (இவர் நடிகர் சூர்யாவின் நண்பர்,அவருடைய 2டி நிறுவனத்தின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தப் போட்டிகளை நடத்தினார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று என்று மருத்துவமனையில் சேர்ந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நலம் பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவர் மறைவுக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில
நேற்று (17.08.2020) அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளன. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து
கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன்.ஈ.எல்.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனவரி 30,2020) நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ்
சமூகவலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தரங்கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதும் அநாகரிக கருத்துகளை வெளிப்படுத்துவதும் தொடர்கிறது. அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு
சனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார். அதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று
அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜீத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறித்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாகப் புரிந்து
பிப்ரவரி 24,2018 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நேற்று (மார்ச் 11) அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களோடு நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு


















