2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். அவர்
சூர்யா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த காப்பான் படம் 2019 செப்டெம்பரில் வெளீயானது. அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. அதேசமயம் அவர் அடுத்த படத்துக்கான கதை எழுதி திரைக்கதையையும் தயார் செய்துவிட்டாராம். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிற பேச்சு வந்தது. மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தை
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஷாலுன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். அடுத்து மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்விக்கு விடையாக சிம்புவை வைத்து புதியபடம் தொடங்கப்போகிறார் என்றார்கள். மிஷ்கின் சிம்பு இருவரும் இணைவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு
The BIGGEST single of the year arrives! Make way for complete #Verithanam packed with all things mass! #ThalapathyVijay crooning the #ARRahman single for #Atlee’s #Bigil is truly momentous! Plug in your earphones and hit the repeat button already!
விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள், தீபாவளியையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் விஜய்யின் பிகில் திரைப்படம், பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமை சுமார் எண்பத்தைந்து கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி உதவி இயக்குநர் கே.பி. செல்வா
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் விவரமும் விலை விவரமும் பரவி வருகிறது. அதன் படி…. சென்னை –
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை
விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அது கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக





















