கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.












