சூர்யா 39 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிப்பு
சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதர்கடுத்து அவர், சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
சூர்யா 39 என்றழைக்கப்படும் இப்படம் குறித்த முதல் அறிவிப்பு, ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, வெளியானது.
அதற்கடுத்து, இன்று (ஆகஸ்ட் 12) இயக்குநர் சிவாவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியோடு, சூர்யா இயக்குநர் சிவா ஆகியோர் இணையும் சூர்யா 39 ஆவது படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று சொல்லியிருந்தார்கள்.
அதன்படி மாலை 5.40 மணிக்கு இப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில், இப்படத்துக்கு டி.இமான் இசை, வெற்றி ஒளிப்பதிவு, திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பு, மிலன் கலை இயக்கம்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.