சிவகார்த்திகேயன் புதியபடம் தொடங்குவது எப்போது? – புதிய தகவல்கள்
சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.
இந்தப் படத்தை முடித்தபின், இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க்விருக்கிறார். அந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகியாக ரகுல் பிரீத்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. அதையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதுபற்றி மறக்க முடியாத சந்திப்பு, நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சார் என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார்.