சினிமா செய்திகள் நடிகர்

நல்லா இருந்த சிம்புவ ஊதிக் கெடுத்தது யாரு?

சில நாட்களுக்கு முன், ரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்திருந்தார். அது….

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள்.

ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும்.

திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்

இவ்வாறு ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையிட்டிருந்தார் சிம்பு.

இதையொட்டி, இவருக்கு ஏது ரசிகர்கள்? இவருக்கு எதற்கு இந்த விளம்பரம்? என்று அவரை சீண்டியிருக்கின்றனர்.

அதன் விளைவாக அவர் வெளியிட்டிருக்கும் இன்னொரு காணொலியில்…..

வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள், கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் குடத்தில் ஊற்றுங்கள். ஏற்கனவே நான் வெளிட்ட வீடியோ குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர் எனக்கு ரசிகர்களே இல்லை என சொல்கின்றனர். எனவே படம் வெளியாகும்போது வேற லெவல்ல செய்யுங்க என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் சிம்பு.

நல்லா இருந்த சிம்புவ ஊதிக் கெடுத்தது யாரு?

Related Posts