செய்திக் குறிப்புகள்

சண்முகபாண்டியன் நடிக்கும் புதியபடம் தொடங்கியது – விவரங்கள்

மதுரவீரன் படத்துக்குப் பிறகு விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்கும் படத்தை
டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் தயாரிக்கிறது. வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார்.

இப்படம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இவ்விழாவில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

யு.அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

கேரளக் காடுகளில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில்,கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம்தேதி அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப குழு விபரம்…..

கதை இயக்கம் – யு.அன்பு
திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
கலை இயக்கம் – பி.ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா எய்ம்
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts