முகம் தெரியும் பெயர் தெரியாது – நடிகர் செல்லதுரை திடீர் மரணம்

‘ராஜா ராணி’, ‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 29) மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 84. அவருடைய இறுதிச் சடங்கு இன்று பிற்பகம் 2 மணிக்கு நடைபெறும் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.
செல்லதுரையின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் செல்லதுரை ஆகியோர் மாரடைப்பால் காலமானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய புகைப்படத்தைப் பார்த்த பின் இரசிகர்கள் பலரும் அட இவர் மறைந்துவிட்டாரா என்று அதிர்ச்சியுடன் கேட்கின்றனர்.