தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் சித்ரா. என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நாயகர்களுக்குத் தங்கை வேடமேற்று நல்ல வரவேற்பைப் பெற்றவர். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர்,2020
‘ராஜா ராணி’, ‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 29) மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 84. அவருடைய இறுதிச் சடங்கு இன்று
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறையுள்ள கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளவர். மரம் நடுதல் போன்ற நற்காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். நேற்றுத்தான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் மக்கள் எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று















