சினிமா செய்திகள்

மதுரை அன்பு மகள் திருமணத்துக்கு விஜய்க்கு அழைப்பு இல்லையா? ஏன்?

இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா, (இவர், பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள்)
சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரண் (இவர்,குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் இராஜேந்திரன்)

ஆகியோர் திருமணம் 21 பிப்ரவரி 2022 அன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

இத்திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.மதுரை அன்பு மற்றும் ஐஏஎஸ் அதிகாரி இராஜேந்திரன் ஆகிய இருவரும் இணைந்து முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் நிறைந்துகிடக்கிறது.
அவற்றில், விஜய்க்கு அழைப்பு கொடுக்கவில்லையா? அவருக்குக் கொடுக்கும் புகைப்படங்களைப் பதிவிடுங்கள் என்று விஜய் இரசிகர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

ரஜினி, கமல் வரிசையில் நடிகர் விஜய்க்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.அவருக்கு அழைப்பு கொடுக்கப்போகும்போது மணமகன் மற்றும் மணமகளையும் அழைத்துச் சென்றார்களாம்.அனைவரிடமும் மிக இயல்பாக நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தாராம் விஜய்.

ஆனால் அந்தச் சந்திப்பு குறித்த புகைப்படம் வெளிவரவில்லை.

ஏன் என்று கேட்டால்?

விஜய் அடுத்து நடிக்கும் படத்துக்காகப் புதுவித தோற்றத்தில் இருக்கிறாராம். அத்தோற்றம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக புகைப்படம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம்.

ஆகவே, அந்தப்புகைப்படத்தை வெளியிடாமல் தவிர்த்துவிட்டார்களாம்.

Related Posts