September 3, 2026
செய்திக் குறிப்புகள்

ஹாய் படத்துக்கு வரவேற்பு இருக்குமா என பயந்தேன் – கவின் வெளிப்படை

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,செப்டம்பர் 2 அன்று, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்…

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் பேசுகையில்,

முதலில் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.நீங்கள் இல்லாமல் எந்தப்படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை.‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி.இந்தப்படத்தை உருவாக்கியபோது,பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள்.நல்லகதையையும்,நல்லபடத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப்படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்துவரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது.குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்கமுடியாது.தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு,‘தம்பி,நீ எதுவும் சாப்பிடாதே,வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன்,என்னிடம்தான் சாப்பிடவேண்டும்’என்று அன்புடன் கூறினார்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன்,அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது.
பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.அதனால் அவரைப்பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது.இந்தப்படத்திற்காக உழைத்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது.
விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது.அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக்கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும்.அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது.இன்று அந்தக் கதையை ஒரு நல்லபடமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும்,இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,

அனைவருக்கும் நன்றி.படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும்,சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி.இந்தப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,

அனைவருக்கும் நன்றி.இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம்.கவின் எனக்கு பள்ளிக்கால நண்பர். பள்ளி நாட்களில்,‘நீ நடிகராக வருவாய்,நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்ததருணம்வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால்,அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.இந்தப்படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்றார்.

நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,

என்னை மேடைக்கு அழைத்து பேசவைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஊடகநண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.பிரபு சார்,ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்தகலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும்.‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம்.இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை,படத்தொகுப்பு,இயக்கம்,கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்கமுடியும்.இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார்.படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது.ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார்,பிலோமின் ராஜ் சார்,ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் குரேஷி பேசுகையில்..,

பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன்.ஆனால்,இன்று ஒரு நடிகராக இந்தமேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப்படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி.குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி.இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்லமனிதர்.மழை,புயல்,வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து,வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது.அவருடன் இந்தப்பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபு சார்,ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார்.புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார்,அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை.ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன்.இந்தப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.
மேலும்,இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே,எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்என்றார்.

நடிகை காவ்யா பேசுகையில்..,

ஹாய் படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இந்தமேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம்.கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து,அவரைப்போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன்.இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது.‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும்,அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே;இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும் என்றார்.

இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,

“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால்,இந்தமேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம்.இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து,என்னை நம்பி இந்தப்படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக,என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து,தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள்வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர்.சத்யன் சார்,குரேஷி, அக்ஷய் குமார்,அம்ருதா,காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது.பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன்,நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம்.இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது.அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா,படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர்.அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.
எனக்கு வாய்ப்பளித்து,என் மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ்சிவன் அண்ணா,நயன்தாரா மேம்,எஸ்.எஸ்.லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை,பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர்.இந்தப்படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல;என்னை நம்பி இந்தப்பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில்,

முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம்.பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி,ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்.இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது.நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார்.அதேபோல்,பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர்.அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும்,சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது.
கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும்,அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள்.விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள்.மேலும், விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும்,மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்.இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகை சுஹாசினி பேசுகையில்,

‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும்,அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும்,இந்தப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்.அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி.கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன்.இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை.எனவே,இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள்.ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்என்றார்.

நடிகர் பிரபு பேசுகையில்..,

‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு.இந்தப்படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து,இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும்,இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி.படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை.
கவின் இந்தப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.அவரிடம் நிறைய திறமையும்,நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது.தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளரவேண்டும்.ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர்.‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும்,படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார்.சில நேரங்களில் சிரிப்பார்,சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால்,இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள்.இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்றார்.

நடிகர் கவின் பேசுகையில்..,

முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது.சமீபத்தில் தொடர்ந்து பல நல்லபடங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில்,‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது.ஆனால்,தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில்,குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு,பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால்,மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து,மகிழ்ந்து,சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது,நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப்படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.
இயக்குநர் விஷ்ணுவின் இந்தப்பயணம் மிகவும் சிறப்பானது.பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால்,‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது.படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன.படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க,மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு,பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும்,இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட,அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன்.ஒரு படம் வெற்றி பெறுகிறதா,தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே.ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள்,நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம்.அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.
கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம்,ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.ராதிகா மேடம்,பிரபு சார், சுகாசினி மேடம்,பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்யமுடியவில்லை.அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக்கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன்.இன்று அந்தக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts