முத்தையா இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் ஓர் இயக்குநர் மகன்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் அண்மையில் சன் தொலைக்காட்சியில் வெளீயான புலிக்குத்திப்பாண்டி ஆகிய ஆறு படங்களை இயக்கியிருக்கிறார் முத்தையா.
இவற்றிற்கடுத்து இவர் விஷாலை வைத்து ஒரு படம், 2டி நிறுவனத்துக்காக சூர்யா அல்லது கார்த்தியை வைத்து ஒரு படம், இவை தாமதமாவதால் அவற்றிற்கு முன்பாக கெளதம்கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
மேற்சொன்ன நடிகர்களுக்கு வரிசையாக வேறு இயக்குநர்களுடனான படங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இவர் ஒரு புதுமுக நடிகரை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்தப் புதுமுக நடிகர் ஓர் திரைப்பட இயக்குநரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இரட்டையர்களில் ஒருவரான ஜெர்ரியின் மகன் தான் அந்தப் புதுமுக நடிகர் என்று சொல்கிறார்கள்.
ஏராளமான விளம்பரப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஜேடி ஜெர்ரி, தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அருள் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில்தான் ஜெர்ரியின் மகனை நாய்கனாக வைத்து முத்தையா இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.