இயக்குநர் அட்லியை அதிர வைத்த தயாரிப்பு நிறுவனம்
விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி.
தெறி வெற்றி என்பதால் மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்குக் கிடைத்தது.மெர்சல் வெளியான போது பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது.
அப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது என்று சொல்லப்பட்டாலும் படத்தைத் தயாரித்த நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
அதைத் தொடர்ந்து அட்லி படத்தில் நடிப்பார் என்றும் அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
இப்படத்துக்காக அலுவலகம் ஒன்றை அட்லிக்காக ஒதுக்கியதாம் ஏஜிஎஸ் நிறுவனம். ஆனால், எனக்குத் தனியாக அலுவலகம் இருகிறது. அங்கிருந்தே நான் பட வேலைகளைச் செய்கிறேன். அதற்காக மாத வாடகையை நீங்கள் செலுத்திவிடுங்கள் என்று சொன்னாராம் அட்லி.
இதனால், கோபமான தயாரிப்பு நிறுவனம், எங்கள் அலுவலகத்துக்கு வந்தால் எங்கள் செலவு, உங்கள் அலுவலகம் என்றால் உங்கள் செலவு என்று கறாராகச் சொல்லிவிட்டதாம்.
அதோடு, முந்தைய தயாரிப்பு நிறுவனத்தில் நடந்துகொண்டது போல் எங்களிடமும் நடந்துகொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்ததாம்.
மீண்டும் தன் இயக்கத்தில் விஜய் நடிப்பதால் இறுமாப்புடன் இருந்த அட்லி, தயாரிப்பு நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.