சினிமா செய்திகள்

விஜய் அஜீத் விஜய்சேதுபதி பற்றி சிரஞ்சீவி கருத்து

தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி ஆனந்தவிகடன் வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் சிறு பகுதி…..

விஜய்சேதுபதி பற்றி….

நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார்.

இந்த ராஜபாண்டி கேரக்டர்ல யார் நடிக்கலாம்னு பேச்சு வந்தப்போ நான்தான் விஜய் சேதுபதி பேரைச் சொன்னேன். அவர் தமிழ்ல எவ்ளோ பிஸியா நடிச்சிட்டிருக்கார்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், அவர்கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு.

போன் அடிச்சேன். ‘ராஜ பாண்டின்னு ஒரு கேரக்டர். நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்’னுதான் சொன்னேன். ‘உங்க படத்துல நடிக்கிறது எனக்குப் பெருமை சார். நிச்சயமா வந்து நடிக்கிறேன்’னு சொன்னார்.

விஜய் சேதுபதி சிம்பிள்னு தெரியும். ஆனால், இவ்ளோ ஹம்பிளான மனிதர்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஜார்ஜியாவுல ஷூட்டிங் நடக்கும்போது நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே வரும். முக்கால்வாசிப்பேர் விஜய் சேதுபதியைப் பார்க்க வந்திருந்தவங்க.

திறமையான நடிகர்கள் வரிசையில கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நான் விஜய் சேதுபதியைப் பார்க்குறேன். விஜய் சேதுபதி என் தம்பி. என் தம்பிகூட நடிச்சதுல எனக்குத்தான் பெருமை.

விஜய் அஜீத் பற்றி…

…..அஜித்துடைய முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்துக்கு நான்தான் க்ளாப் அடிச்சேன். அதேபோல விஜய் படத்துக்கு நானும் ரஜினியும் க்ளாப் அடிச்சு கேமரா ஆன் பண்ணித் தொடங்கி வெச்சோம். அப்பவே, இவங்க ரெண்டு பேரும் பெரிய இடத்துக்கு வருவாங்கன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் இருந்துச்சு. இன்னைக்கு ரெண்டு பேரும் பெரிய ஸ்டார்ஸ் ஆகிட்டாங்க

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts