ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. இவர்
செய்திகள்
ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா அண்மையில் தெரிவித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், கன்னடத் திரையுலகின் முன்னணி
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம்
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது. இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை. தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நயன்தாரா கூறிவிடுவார். ஆனால் இருவரும் இணைந்து பல் நாடுகளுக்குப்
விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம்,
இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படும் துன்பத்தை சர்க்கார் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குநர் திரு முருகதாஸ், தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்று பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. பரத நாட்டின் கடல் எல்லையை காக்கும்
பிக்பாஸ் முதல் பகுதியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது செய்தியானது. இதுபற்றி ஆரவ்விடம் கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட்
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய
விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா? அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி
சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்சின் சவாலை முறியடிப்போம் என, தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தை HD தரத்தில், இணையத்தில் வெளியிட உள்ளதாக, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைத்துறையை மிரட்டியுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ராக்கர்ஸை வெற்றி பெற





















