செய்திக் குறிப்புகள்

வித் லவ் வெற்றிக்கூட்டணியின் அடுத்தபடம் – அபிசன் ஜீவிந்த் தகவல்

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,வித் லவ் (With Love) திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது.

அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்த இந்நிகழ்வில்,

படத்தொகுப்பாளர் சுரேஷ் பேசியதாவது..,

இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவுக்கு நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,

மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு படத்துக்கும்,இது நல்லபடம்ன்னு நீங்கள் நம்பினால்,அதை முழுமனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப்படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்குக் கிடைத்தது, ஒரு பெரியவரம்னு தான் நினைக்கிறோம்.உண்மையிலேயே, நான் நீண்டநாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு.அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பேன்.சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன்.அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.
ரஜினி சாரை பார்க்கும்போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி,சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன்.உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது.என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.
இந்தப்படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும்.மதன் – அடுத்தபடம் இன்னும் கவனமா பண்ணணும்.அபி – இது உன்னோட முதல்படம்.அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம்.அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி.அனஸ்வராவுக்கு வாழ்த்துகள்,கடைசியாக, இந்தப்படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி என்றார்.

நடிகர் சரவணன் பேசியதாவது..,

இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன்.அதேமாதிரி மகேஷ் சார்,மேலும் இந்தப்படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்தப்படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான்.ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி,அதைப் பாராட்டி,நிறைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள்.என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன்.இந்தப்படம் இன்னும் நல்லபடியாக,இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ஆனந்தி பேசியதாவது….

நான் இந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது,ஒரு நடிகராக இல்லாமல்,ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன்.நேத்து நைட்டுதான் இந்தப்படம் பார்த்தேன்.ஒரு நல்லபடத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.
இந்தப்படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக,ரொம்ப மென்மையாகச் சொல்லுகிறது.“There are no bad people.But we all do bad things sometimes.”
அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்தப் படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட ஒருபடத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை காவ்யா பேசியதாவது….

ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லிப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.என் கதாபாத்திரத்தைக் கொண்டாடிய இரசிகர்களுக்கு நன்றி.இப்படத்தில் பங்குகொண்டது மகிழ்ச்சி.தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு என் நன்றி என்றார்.

நடிகர் சச்சின் பேசியதாவது..,,

இப்படத்தில் பங்குகொண்டது மிக மகிழ்ச்சி.இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி.அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை அனஸ்வரா பேசியதாவது….

இந்தப்படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவாக்கிய படம்.அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டதுதான் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தோசம்.
இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி.அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார்.அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அதை மக்கள் இரசித்தது ரொம்ப மகிழ்ச்சி.சௌந்தர்யா மேடம்,மகேஷ் அண்ணா,காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.
இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்கமுடியாதது.அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது.எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப்படத்துக்கு பத்திரிகையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது.அபியை முதல்படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழுஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி.அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாறமாட்டார் என நம்புகிறேன்.எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.
இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்னபோதே இது வெற்றிப்படம் என்பது தெரியும்,கதை சொல்லும்போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார்.அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும்,அதை எடுத்தவிதமும் அத்தனை அழகாக இருந்தது.அனஸ்வராவுக்கு படத்தில் நான் கைதட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.
தயாரிப்பாளர் மகேஷ் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.அவரைப் பார்த்தால் என் பையன்தான் ஞாபகம் வரும்.குழந்தை மனது கொண்டவர்.கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார்.எங்களுக்கு முழுஆதரவு தந்ததற்காக நன்றி.சௌந்தர்யா மேம், மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர்.அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும்.அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக்காண ஆவலாக இருக்கிறேன்.
படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி என்றார்.

இயக்குநர் மதன் பேசியதாவது….

எல்லாருமே“இந்தப்படம் கண்டிப்பா ஒரு வெற்றிப்படம்” எனச் சொன்னார்கள்.அதேபோல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம்,இருவருக்கும் பெரிய நன்றி.அதேமாதிரி சரவணன் சார் டீம் உட்பட,இந்தப்படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவிஇயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.படத்தை கொண்டாடிய இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,

நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை.அதனால ரொம்ப சந்தோஷம்.பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுகளில் இருந்துதான் இந்தப்படம் உண்மையிலேயே take off ஆனது.இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாகக் கொண்டாடுகிறார்கள்.
மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன்.லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்குத் தெரியும்.இந்தக் கதை சொல்லும்போதே,“இந்தப்படம் ஹிட்” எனத் தோன்றியது.அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.அனஸ்வரா நடிப்பைப் பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரியபலம் என்று புரிந்தது.அபி எனக்கு சொந்தத்தம்பி.அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப்பையன் மாதிரி பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.ஷான்தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர்.இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது.எங்கள் சின்னடீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.
சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது.அவர் எனக்கு எப்போதும் அக்காதான்.எங்களால் முடியாத பல விசயங்களை ஒரு போன் கால்ல அவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட்.எங்கள் டீமின் தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன்.இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.படத்தைக் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி என்றார்.

தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது….

ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது.ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து படத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.
படம் முடிந்ததும், வீட்டிற்குச் சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னைக் கட்டிப்பிடித்து சிரித்தார்கள்.அப்போதுதான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன்.அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்கமாட்டேன்.16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும்,இந்தப்படத்தின் மூலமாகத்தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது.இதுதான் முதல் சக்சஸ் மீட்.
அபி எனக்கு ஒரு பேபி பிரதர்.அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் இங்கே நீண்டகாலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள்? என்று கேட்கத் தோன்றியது.இந்தப்படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார்.குறிப்பாக இறுதிக்காட்சியில் வரும் அமைதியும்,மழையைப் பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்.
இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றிப்படம் என்ற நம்பிக்கை வந்தது.இரண்டாம்பாதியில் வரும் காட்சிகளும்,இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரேஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச்.அவரது அடுத்தபடத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்துநிமிடத்தில் உருவான இசை என்பது நம்பமுடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும்.பாடலாசிரியர் மோகன்,எடிட்டர் சுரேஷ்,பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி.இந்தப்படம் வெறும் ‘நல்லபடம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி,மக்கள் தங்கள் படமாகக் கொண்டாடுவது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது…..

ரஜினிசார் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும்,அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது.இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது.
நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தீர்கள்.நல்ல ரிவ்யூஸ்,நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம்.அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்கவைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி.உன்னை இந்தமேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது.இந்தப்பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துகள்.இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார்.‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல்.புகழை கூட அழகாக,ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர்,அவருக்கு நன்றி.பாடலாசிரியர் மோகன்,எடிட்டர் சுரேஷ்,ஸ்ரேயாஸ்,தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது.ஆடியன்ஸ் அதை ரொம்ப இரசிக்கிறார்கள்.இந்தக்கூட்டணி அடுத்தும் தொடரும்.காவியா,சச்சின்,தேனி முருகன், சரவணன்,ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும்,‘நான் எதாவது தவறு பண்ணினேனா? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது.அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.அதுதான் இந்த உறவின் அழகு.அவருக்கு என் நன்றிகள்.
சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்தவார்த்தை எனக்கு ரொம்ப சந்தோசம் கொடுத்தது.மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரியபடம் செய்கிறோம். இந்தப்படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.அதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்தப் பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts