ரஜினி சொன்ன ஒரு வார்த்தை – அபிஷந்த் ஜீவிந்த் நெகிழ்ச்சி
முழுக்க முழுக்க தற்கால இளைஞர்களைக் கவரும்,அருமையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வித் லவ்.இப்படத்தில்,டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.கே.சுரேஷ் குமார் படத்தொகுப்புப் பணிகளைச் செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சனவரி 31 அன்று நடைபெற்றது
இந்நிகழ்வினில் உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,
இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி.வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.அபிஷன்,அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம்.ஒரு குடும்பம்போல இருந்த குழுவிற்கு நன்றி.படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் சுரேஷ் பேசியதாவது..,
வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன்,வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.படம் அருமையாக வந்துள்ளது.அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா பேசியதாவது…,
இப்படத்தின் கதையை மிக அழகாகச் சொன்ன மதனுக்கு நன்றி.கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை.திரையிலும் மிக அழகாக வந்துள்ளது.தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம்,மகேஷ் இருவருக்கும் நன்றிகள்.அபிஷந்த்,அனஸ்வரா மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி.படத்தை எடுக்கும்போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது.படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஹரீஷ் பேசியதாவது…,
எனக்கு மதன் ரொம்பநாளா தெரியும்.அபிஷந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம்.மதன் எனக்கு கால்பண்ணி இந்தக்கதை சொல்லிட்டு,அபிஷந்த் இதில் நடிக்கிறார்னு சொன்னதுமே எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல.ரொம்ப சந்தோஷமா இருந்தது.மதன் எனக்குக் கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக இருந்தது.இந்தப்படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது.இந்த படக்குழுவிற்கும்,மதனுக்கு,மகேஷ் அண்ணா,சௌந்தர்யா மேம் – எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.நீங்க எங்களுக்கு கொடுத்த சப்போர்ட் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சச்சின் பேசியதாவது..
ஹரி சொன்ன மாதிரி, இந்தப்படம் ஒரு குடும்பப்படம் மாதிரிதான்.ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம,தினமும் காலைல சுற்றுலாவுக்குப் போற மாதிரி ஃபீல் இருந்தது.மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார்.மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம் எல்லா சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி.ஷூட்டிங்ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை, திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன்.என் உடன் நடித்த நடிகர்கள், பிரியா உட்பட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி உங்களுக்கும் வந்து சேரும். நன்றி என்றார்.
நடிகை காவ்யா பேசியதாவது..,
இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்,மிக முக்கியமான தருணம்.இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி.இந்த வாய்ப்பை வழங்கிய மதன்,தயாரிப்பாளர்கள் மகேஷ் அண்ணா,சௌந்தர்யா மேடம் ஆகியோருக்கு நன்றி.என்னுடன் இணைந்து நடித்த அபிஷந்த்,அனஸ்வரா,சச்சின்,ஹரி ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள்.கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது….
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள்.நன்றி.அபி முதன்முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்னபோதே வியந்தேன்.அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனால் அடுத்தபடத்திலேயே ஆகிவிட்டார்.மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும்.அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும்.இப்படத்தில் உமாதேவி ஒரு பாடல் எழுதியுள்ளார்.அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான்ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளன.அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன்.அனஸ்வரா படம் பார்க்கும் எல்லோரும் எனக்கும் இப்படி பெண் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள்.இப்படம் இந்தவருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி என்றார்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது..,
சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.அப்போது இவர் இப்படியொரு திறமையான,முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை.இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார்.சௌந்தர்யா மேடம் இந்தப்படத்தை இரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென,ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார்.அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.இயக்குநர் மதன் அவர்களின் முதல்படம் போலவே தெரியவில்லை.மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார்.எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார்.அனஸ்வரா ராஜன் மிக அருமையாக நடித்துள்ளார்.ஷான்ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார்.படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,
வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம்.அபிஷந்த் அனஸ்வரா ஜோடி,மிகவும் க்யூட்டாக இருக்கிறது.காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப்படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது.அவரது முதல்படம் போலவே தெரியவில்லை.எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது..,
படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது.சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார்.தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.நான் அவரிடம், “படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது” என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார்.இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,
ஒரு உண்மையான சினிமா இரசிகனுக்கு,படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட,ஒரு நல்லபடத்தைப் பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது.அந்தப்படத்தைப் பார்த்து,அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும்.அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன்.அதேஉணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான்,மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும்.தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துகள்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,
நான் இரண்டு நாள் முன்னால் இந்தப்படத்தைப் பார்த்தேன்.உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.காரணம்,இதோட சிம்பிளிஸிட்டி.சின்னச்சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது.பெர்ஃபார்மன்ஸ்,ரைட்டிங்,சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள்.எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப்படத்தோட பெரிய பலம்.அபிஷந்த் நடிப்பு,அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம்.குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போகவில்லை.இயக்குநர் மதன்,மோகன்ராஜ் ஐயா,ஷான் ஐயா,புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும்.இந்தப்படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன்,இந்தப்படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்தபோது,கொஞ்சம் தயக்கமாக இருந்தார்.ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும்,அவர் ஒரு புதியஆளாக மாறிவிட்டார்.ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார்.கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப்பெரிய உயரத்திற்குச் செல்வார்.ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப்படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் இரசிகனாக மாற்றிவிட்டது.எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும்.ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே,அதேநேரத்தில் லேசான,ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.படம் மிக அருமையாக வந்துள்ளது.சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம்,ரஜினி சார்க்கு மகளாக இருப்பது அத்தனை எளிதல்ல.அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை.சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர்.அவருக்கு என் நன்றி.இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் மதன் பேசியதாவது..,
இந்தப்படத்திற்கு உறுதுணையாக நின்ற உதவிஇயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன்.அப்போது அவர் அந்தப்படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக்கதையை வாசித்தார்.கதையைப் படித்தபிறகு,‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார்.நான் அவரிடம் இந்தப்படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்ட
போது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது..,
என் முழுக்குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.மதன் என்னிடம் கதை சொல்ல வரும்போது,ஒரு காட்சியை படமாக்கிக் காட்டினார்.அது எனக்கு மிகவும் பிடித்தது.உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர்.காவ்யா உங்களை தமிழ்ரசிகர்கள் நிச்சயம் மனதாரக் காதலிப்பார்கள்.இந்தக்குழு என்னை நிறைய சிரிக்கவைத்தது.இந்த சினிமாதுறையும்,இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம்தான்.சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரியஅக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.
மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர்.அதேசமயம்,அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர்,எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும்.அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.மோனிஷா,சத்யா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம்,திரைக்கு வெளியே நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்புதான்.மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி.படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது..,
8 மாதங்களுக்குப் பிறகு மீடியாவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.நாங்கள் ஒரு நல்லபடத்தை உருவாக்கியிருக்கிறோம்.அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம்.மக்கள் இந்தப்படத்தை ஆதரித்து,பாதுகாப்பார்கள் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.அபிஷந்த் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய இயக்குநராக உருவெடுப்பார்.அபிஷன் ஒரு தூயமனம் கொண்டவர்.அவர் மாறாமல் அப்படியே இருக்கவேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்குப் பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன்.வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா,இந்தப்படத்திற்குப் பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார்.
அபிஷந்திற்குள் இருந்த ஒரு தாழ்வுமனப்பான்மையை மாற்றியதற்காக ரஜினிகாந்த் சாருக்கு என் நன்றிகள்.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும்,இயக்கத்தில் வாய்ப்புகள் கிடைக்கும்படி நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று சௌந்தர்யா அக்காவிடம் கேட்டுக் கொள்கிறேன்.இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,
நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.தலைவர் 173, ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது.அந்தப்படம் டெட்லியாக இருக்கும்.மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார்.அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்தப்படம் 100 சதவீதம் மதனின் படம்தான்.மதன் மிக இனிமையானவர்,அந்தக்கணத்தில் வாழத்தெரிந்தவர்.படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் பேசியதாவது..,
என் முதல் நன்றிகள் அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே.நான் நடிப்பைத் தொடரலாமா என்ற பல சந்தேகங்கள் எனக்குள் இருந்த காலத்தில்,சூப்பர்ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார்.அப்போது அவர்,‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார்.அந்த ஒரு வார்த்தையிலேயே என் எல்லா இன்செக்யூரிட்டிகளும் உடைந்துவிட்டது.அன்றே — என்ன நடந்தாலும் இந்தப்படத்தை நான் செய்யவேண்டும் என்று முடிவுசெய்தேன்.இந்தப்படத்தின் வெற்றியை முழுவதுமாக சூப்பர்ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன்.இயக்குநர் மதனுக்கு நன்றி, டூரிஸ்ட்ஃபேமிலி பட ஷூட்டிங்போதே என்னை நடிக்கக் கேட்டார்,இந்தப்படத்தை நான் செய்ததற்காக எப்போதும் பெருமைப்படுவேன்.டூரிஸ்ட்ஃபேமிலி படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது.ஆனால் இந்தப்படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும்.மகேஷ் அண்ணா ஒரு தயாரிப்பாளர் அல்ல எனக்கு எப்போதும் என் அண்ணன்தான்.சௌந்தர்யா மேடம் டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின்போதே என்னை ஒரு ஸ்டார் என வாழ்த்தினார்.அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன்.ஷான் எனக்காக வந்தார் அவருக்கு நன்றி.அனஸ்வரா பெயர்தான் முதலில் வரவேண்டும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார்.படத்தில் நடித்த மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர்.படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.













