வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும்போதே இதன் இரண்டாம்பாகம் வெளிவரும் என்று சொன்னார்கள். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் தனித்தனியே வெவ்வேறு படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் வடசென்னை 2 நடக்குமா? என்பதே ஐயமாக இருக்கிறது. உண்மை நிலவரம் இப்படி
வடசென்னை படம் தொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த லட்சுமிபதி முத்துநாயகம் எழுதியுள்ள வேதனைப்பதிவு….. வடசென்னை திரைப்படத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகள் கெட்ட வார்த்தைகளுக்காக மட்டுமே அல்ல. வடசென்னை பலதரப்பட்ட உழைக்கும் மக்களை கொண்டது.. இத்திரைப்படத்தில் அப்படி பலதரப்பட்ட மக்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?.. மாறாக மீனவ சமூக மக்களை மட்டும் பதிவு செய்து அதிலும்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அமீர் ஆண்டிரியா உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப் படத்தில் வடசென்னை வாழ் மக்களையும் மீனவ மக்களையும் இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்களும் அதற்காகப் படக்குழுவினருக்குக் கண்டனங்களும் வந்தன. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், மீனவமக்களின் கோரிக்கையை ஏற்று ஓடும் படகில் நடக்கும் அமீர் ஆண்ட்ரியா
வடசென்னை படத்தில் பழங்குடி மீனவ சமூகத்தை குற்றப் பின்னணி உள்ள சமூகமாக காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் கூறியுள்ளது. அவ்வமைப்பின் தலைவர் புரட்சிக்கயல் கு.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வியர்வை சிந்தி உழைக்கும் அடித்தட்டு சமூக மக்கள் நிறைந்த வட சென்னையை, சினிமா வெற்றி எனும் லாப நோக்கத்திற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள்
வடசென்னை படத்தில் நடிகர் பவனின் தம்பி சிவாவாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பாவல் நவகீதன். அப்படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்…. எனக்கு என் அப்பாவைப் போலவே பத்திரிகையாளராக வரவேண்டும் என நினைத்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஊர் செங்கல்பட்டு. அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிப்பு ஏறவில்லை. ஆனால்
வடசென்னை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விதைக்காதீர்கள் என்று திரையுலகினருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. வட சென்னை சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? “வட சென்னையில்” வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களா? “வட சென்னை” பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமா? அப்படி உங்கள்
ஒரு கொலையில் படம் தொடங்குகிறது. செத்தவர் யார்? எதற்காக அவரைக் கொன்றார்கள்? என்கிற கதையை திரைக்குப் பின்னே இருந்து ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருக்க அதற்கேற்ப காட்சிகள் வருகின்றன. நாயகன் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, பவன், ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,தினா, மட்டுமின்றி ஏராளமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி மூச்சுத் திணற வைக்கிறார்கள்.
வட சென்னை – சுட சுட – வாசிங்டன்னில் இருந்து முதலில் மிகப் பெரும் ஆச்சர்யத்தை சொல்லி விடுகிறேன். செவ்வாய் மாலை 8.00 முதல் காட்சி – அரங்கம் முழுக்க நிரம்பி வழிந்தது! என்னால் நம்பவே முடியவில்லை – அமெரிக்காவில் வேலை நாட்களில், அதுவும் செவ்வாய் அன்று! இயக்குநர் வெற்றி மாறன், வட சென்னை களம் என்ற காரணத்தாலும், சிலர் தனஷுக்காக வந்து இருப்பார்கள் போலும்!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தப்படத்துக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. அதில், இனிய நண்பர் தனுஷுக்கும் வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவினருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார்.
தனுஷ் நடித்த வடசென்னை படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனுசை வைத்து ஆடுகளம், பொல்லாதவன் படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி உள்ளது. கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மூன்று




















