பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் வலியும் வாழ்வும் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.ஆதரவு கொடுத்த பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்
விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாமனிதன்.சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம்
ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி மே 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் “விசித்திரன்”. இப்படத்தை, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக திரையிட்டனர். படம் பார்த்த பிறகு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி….., வழக்கமாக ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்குப் பிறகு தான் இயக்குநர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார். அதற்குள் பலர்
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படம் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தயாரிப்பாளராகவும் ஆகிறார் என்று சொல்கிறார்கள். ஆம், கலைப்புலி தாணு
விஜயகாந்த்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாகக் காலடி எடுத்துவைத்தார். அதன்பின் அவர் நடித்த மதுரவீரன் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இவற்றிற்கு அடுத்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் நடக்கவில்லை. மித்ரன் என்றொரு படம் தொடங்கப்பட்டது. அதுவும் ஒரு
இன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது. இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையை வைத்து அறிவிக்கப்பட்ட ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதற்குப் பெரும்
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான
இயக்குநர் சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் மாமனிதன். இப்படத்தில் இளையராஜாவும் யுவனும் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும்படி சீனுராமசாமி இளையராஜாவிடம் கேட்டதாகவும் அதனால் அவர் சீனுராமசாமி மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக சீனுராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. என் நெஞ்சம் நிறைந்த தமிழ்





















