வாரவிடுமுறையை உல்லாசமாகக் கழிக்க சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நாயகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நால்வர் விலைமகளிரான நாயகி சிருஷ்டிடாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள்.ஊட்டியில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.என்ன நடந்தது? எதனால் நடந்தது? என்கிற கேள்விகளுக்கான
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. நிகழ்வில் கலை இயக்குநர் ஜெய் பேசியதாவது……, “ ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று
முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?
சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில்
கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா பேசியதாவது……… ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான்
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ரெளத்திரம்,இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா,ஜுங்கா,அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்தப்படத்தை ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு சுகுமார்
விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை
விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, கார்த்தி நடித்த கஷ்மோரா மற்றும் அன்பிற்கினியாள் ஆகிய படங்களையும் இயக்கிய கோகுல், கொரோனா குமார் என்கிற புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக 2020 ஜூன் 19 அன்று வெளியான செய்திக்குறிப்பு…. இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான்.நம்மில்
அருண்பாண்டியன் ஆயுள்காப்பீட்டுக்கழக முகவராக இருக்கிறார். மனைவி இல்லை. ஒரே ம்கள். செவிலியர் படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அப்பாவின் கடனை அடைத்தாக வேண்டும் என்கிற இலட்சியத்துடன் இருக்கிறார். பகுதி நேரமாக ஒரு கோழி உணவுக் கடையில் வேலை பார்க்கிறார். பார்ப்போர் கண்படுகிற மாதிரி அன்பான அப்பா மகளாக இருக்கும் அவர்களுக்கிடையே ஒரு சின்ன விரிசல். அந்த





















