இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகர் சூர்யா – கேஜிஎஃப் தயாரிப்பாளர் புகழாரம்
நடிகர் சூர்யாவின் 48 ஆவது படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு…
ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது.
மக்களின் பேராதரவும்,’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில்,எல்லா தரப்பு சினிமா இரசிகர்களும் இரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில்,இந்திய சினிமா இரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.
ஸ்டாராகவும்,சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ.ஞானவேல்.எல்லா தரப்பு சினிமா இரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை,கே.ஜி.எஃப்,காந்தாரா,சலார் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றிப் படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும்,இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி,இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது…
தமிழ்நாடு,தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை,முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.வணிக வெற்றியையும்,விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேரப் பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.
இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள்,அழுத்தமான கதைக்களத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாகக் கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர்.மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.இந்திய அளவில் பெரும் வெற்றியையும்,கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.The one சூர்யா அவர்களையும்,இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும்,அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடையச் செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது.இந்த தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குநர்களையும்,தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது.அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும்,இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.
S-48 திரைப்படத்திற்கு,இளைஞர்களின் இசை இரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.தமிழ், தெலுங்கு,மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்,யோகிபாபு,குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய,கே.கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும்,ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும்,பா.கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள்.இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன.ஜூலை மாதம் 22 ஆம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













