செய்திக் குறிப்புகள்

நிலத்தை அடமானம் வைத்து படம் இயக்க நினைத்தேன் – ரூம்பாய் பட இயக்குநர் பேச்சு

திரைப்படக்கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”.
அறிமுக நடிகர் சி.நிகில் நாயகனாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி,பிர்லா போஸ்,காத்து கருப்பு, சாதனா,கவிதா விஜயன்,கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மும்பைமாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார் நாயகன்.ஒருநாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.அதேநேரத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதை. ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இந்தப்படம்,ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா மாரச் 14 அன்று நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

இந்தவிழாவிற்கு வரும்போது மனதில்,நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.தயாரிப்பாளருக்கு இந்தபடம் மிகப்பெரிய வெற்றி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.
அவர்கள் என்னிடம் வந்து படத்தைப்பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்தபடத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’என்று.அதற்கு அவர்கள் ‘கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள்.அதற்கு நான் சொன்னேன் – ‘இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள்.ஆனால் அந்தஅளவுக்கு படம் மிகச்சிறப்பாக இருக்கவேண்டும்’ என்றேன்.
பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும்,இரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது.நிகில் நன்றாக நடித்துள்ளார்.இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியைத் தர வாழ்த்துகள் என்றார்.

தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது..,

இன்று காலையில் தமிழ்திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம்.தமிழ்சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும்,அதை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்லவேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன,குறிப்பாக சின்னபடங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்கவேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்.அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்சினிமாவுக்கு நல்லமாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.
புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிகவாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.

தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..

அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவேண்டும் என்று கூறியபோது, மக்கள்செல்வன் விஜய்சேதுபதி சார் உடனே ஒப்புக்கொண்டு அதை வெளியிட்டார்.ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்துபேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள்.அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள்செல்வன் விஜய்சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால்,அந்தபடம் பலகோடி மக்களிடம் சென்று சேரும்.அதற்கும் மேலாக, அந்தபடத்திற்கு ஒரு பெரியகவனமும் கிடைக்கும்.
இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு,அந்தபடத்தில் ஒரு பாடலும் பாடினார்.அந்தபடத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார்.அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரியஅளவில் எளிதாக மக்களிடம் சென்றது.
அதேபோல், “ரூம்பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச்செய்ய உதவிய மக்கள்செல்வன் விஜய்சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.“ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும்.ஒரு ஹோட்டலில் தங்கும்போது பலவிதமான மனிதர்கள் வருவார்கள்.அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும்.அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்தபடத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.
இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்,இந்தபடத்தின் தயாரிப்பாளர் சூரியகலா சந்திரமூர்த்தியின் மகன்தான் கதாநாயகனாக நடித்துள்ளார்,அவருக்கு இந்தநேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் இது அவருடைய முதல்படம்.அவருக்கு வாழ்த்துகள்.
ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும்போது,200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்.ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை.ஆனால் படம் தோல்வியானால் அவர்தான் தெருவில் நிற்கிறார்.ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள்.தமிழ்நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை.சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை.ஆந்திராவில் வந்து நிற்கிறார்.இங்கு 30 சதவீதம்தான் தயாரிப்புக்கு செலவாகிறது.70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை.இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது.எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் இராதாகிருஷ்ணன் பேசியதாவது..,

‘ரூம் பாய்’ இசை வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முடிந்தபிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்தவிழா அமைந்துள்ளது.இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு திரைஉலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.மிகப்பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ்த்திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கேமேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.
பல சவால்களை தாண்டி தமிழ்த்திரையுலகம் மீண்டும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள்,எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம்.அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இனிமேல் எந்த ஒரு பெரியஹீரோவாக இருந்தாலும்,தொழில்நுட்பக் கலைஞராக இருந்தாலும்,அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்குதான் முன்னுரிமை தரவேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால்,சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ்சினிமாவை சீர்படுத்தும்.ரூம் பாய் படம் பெரும் வெற்றிபெற என் வாழ்த்துகள் என்றார்.

‘ரூம் பாய்’ படத்தின் இயக்குநர் ஜெகன்ராயன் பேசியதாவது..,

நிறைய பேசமாட்டேன்திரைப்படத்தில்தான் பேசுவேன். இந்த ஒருநாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.அந்தகனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டுவிழாவை என் தந்தை
என்.வி.சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்.
அவரின் ஆதரவில் இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து 2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.
சினிமா ஒரு கடல்.அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர்.மூழ்கிப்போகிறவர்கள் பலர்.இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.பலவருடப் போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் எனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவிகேட்டேன்,ஆனால் அவர் அதற்குபதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.எனக்கு தோல்வி வந்து ரொம்பபழசு.நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன்.ஆனால் நீங்கள் வெற்றி பெறவேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள்தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழுசுதந்திரம் அளித்தார்,அதனால் தான் என்னால் இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க முடிந்தது.படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி,கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி.இந்தபடம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரியபயணம்.நிச்சயமாக இந்தபடம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts