ஐந்து திரைப்பட இயக்குநர்கள் இணைந்துள்ள நெடுந்தொடர் இனியா
சன் தொலைக்காட்சியில் டிசம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நெடுந்தொடர் இனியா.
இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய தொடரில்,
கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்குக் கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள்.
ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.
ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலிஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பைச்சகித்துக் கொள்ள முடியாதவன்.
எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும்? யார் யாரை வெல்லப் போகிறார்கள்? என்பதை சுவாரஸ்யமாகவும், திடீர் திருப்பங்களோடும் சொல்ல வருகிறாள் இனியா.
இனியாவாக ஆலியா மானஸா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். சன் டிவியில் அவர் நடிக்கும் முதல் தொடர் இது.
சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி விக்ரமாக நடிக்கிறார்.அவர் நடிக்கும் முதல் மெகாத்தொடர் இது. மற்றும் சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி,தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி நடித்துள்ளனர்.
இந்தத் தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் பி.ஆர்.விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குநர் எல்.ராஜா, தொரட்டி பட இயக்குநர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இத்தொடருக்கான கதையை சரிகம கதை இலாகா உருவாக்கியுள்ளது.
திரைக்கதையை கலைமாமணி சேக்கிழார் எழுதியிருக்கிறார்.இத்தொடருக்கு
வசனம் எழுதியிருப்பவர் மாரிமுத்து.
இயக்கம் நாராயணமூர்த்தி
கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றுகிறார் ப்ரின்ஸ் இமானுவேல்











