கன்னட முன்னணியினர் இணைந்த படம் கேடி தி டெவில் – விவரம்
இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன்பிரின்ஸ் துருவ் சர்ஜா,சஞ்சய்தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் ( KD The Devil ).
இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் வி.ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
“கேடி – தி டெவில்” 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக இரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் வெங்கட் கே.நாராயணா
தயாரித்துள்ளார்.
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில்,படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர்.
படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர்.பின்னர் அவர்களுடன் உரையாடி,அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது…
எனக்குத் தமிழ்ப்படங்கள் மிகவும் பிடிக்கும்.கேடி ஒரு வித்தியாசமான படம்,1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம்,டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும்.டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய்தத் சாருக்கு நன்றி.இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் இரசிகர்களுக்குப் பிடிக்கும்,நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில்தான் டப்பிங்,சிஜி எல்லாம் செய்து வருகிறோம்.துருவ் இப்படத்தில் கலக்கியிருக்கிறார்.அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி என்றார்.
நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்து கொண்டதாவது…
சென்னையில் இருப்பது மகிழ்ச்சி.தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன்,ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப்படம் நடித்துள்ளேன்.கமல் சார் படங்களும் பிடிக்கும்.கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம்,துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார்,அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி என்றார்.
நடிகை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது…
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது.மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது,சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள்,நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் இரசிகர்களும் இரசிப்பார்கள்,இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி என்றார்.
நடிகை ரீஷ்மா பகிர்ந்து கொண்டதாவது…..
எங்களின் கேடி பட டீசரை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.இது வெறும் டீசர்தான் படத்தில் இன்னும் பல ஆச்சரியம் இருக்கிறது.சஞ்சய்தத் சார், துருவ் சார்,ஷில்பா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.துருவ் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிறைய டிப்ஸ் தந்தார்.இப்படத்தை நீங்கள் பார்த்துப் பாராட்டுவதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன் என்றார்.
நடிகர் துருவ் சர்ஜா பகிர்ந்துகொண்டதாவது…
எல்லோருக்கும் வணக்கம்,இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார்,தயாரிப்பாளர் சுப்ரீத்,வெங்கட் சாருக்கு நன்றி.எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய்தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி.ரவிச்சந்திரன் சார்,ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள்.ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார்.அட்டகாசமாக நடித்துள்ளார்.இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சுப்ரீத் பகிர்ந்துகொண்டதாவது…
மீடியா நண்பர்களுக்கு நன்றி.இந்தத் திரைப்படத்தை எங்களிடம் கொண்டுவந்த பிரேம் சாருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நட்சத்திரங்களுக்கு நன்றிகள்.இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார.
இவ்வாறு அவர் பேசினார்.
– சதீஷ் சிவா












