இணையங்களில் பரவும் தர்பார் படப்பிடிப்புக் காட்சிகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
தர்பார் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே,படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன.
ரஜினிகாந்த் காவல்துறை உடையணிந்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது.
அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
புகைப்படங்கள் மட்டுமின்றி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காணொலிக் காட்சிகளும் இருக்கின்றன.